என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11¼ பவுன் தங்க நகை திருட்டு
மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11¼ பவுன் தங்க நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பேரமனூர் பேங்க் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42), இவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11¼ பவுன் தங்க நகை திருட்டு்போனது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
Next Story






