என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்ட போது எடுத்தப்படம்.
    X
    வளாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்ட போது எடுத்தப்படம்.

    இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்- கலெக்டர் பேச்சு

    விவசாயிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் பேசினார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாவட்ட விவசாயிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி, வேளாண்மை துறை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் அனைவரும் செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்துவதை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக நம்மில் பலர் ஆரோக்கியத்தை இழக்கிறோம். 

    ஆகவே அவசியம் இருந்தால் மட்டும் செயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 58 கிராம் புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு அவசியம். ஆனால் நம் நாட்டில் அதிகமான புரோட்டின் உணவு பொருட்கள் பற்றாக் குறையின் காரணமாக அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம்.

    நாம் புரோட்டின் உணவுப் பயிர்களை அதிகம் விளைவிப்பதில்லை. இறக்குமதி காரணமாக நம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கிறது. அதனை அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்ள வேண்டும். புரோட்டின் உணவு பெயர்களை நாம் ஊடுபயிராகவும் தோட்டங்களில் விளைவிக்கலாம். 

    நாம் அனைவரும் உணவில் கார்போஹைட்ரேட் உணவினை குறைவாகவும், புரோட்டீன் உணவுகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் நவீன உணவு பழக்க வழக்கத்தில் தவறாக உணவு வகைகளை உண்டு வாழ்ந்து வருகிறோம்.

    ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பருவத்தில் வேளாண்மைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை மற்றும் மீன் வளர்ச்சித் துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து அத்துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விரிவாக்கப் பணியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து பரிமாற்றம் கூட்டம் நடத்தப்படுகிறது. 

    கிராம அளவில் தொழில் நுட்பங்களை கடைப் பிடிப்பதில் முன்னோடியாக இருக்கக் கூடிய விவசாயி ஒருவர் மூலமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல்முறைகளை விளக்குவதற்காக பண்ணை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப 6 பண்ணைப் பள்ளி வகுப்புகள் வேளாண் விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் 25 விவசாயிகள் பங்கு பெறுவார்கள்.

    நவீன தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப் பதோடு மட்டுமல்லாமல் அதை விவசாயிகள் தங்கள் வயலில் செயல்படுத்தி அனுபவம் பெறுவதோடு கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகள் தெரிந்து கொண்டு பின்பற்றி ஏதுவாக செயல் விளக்கங்கள் அமைக்கப்படுகிறது.

    மேலும் வெற்றியடைந்த தொழில் நுட்பங்களை பார்வையிட விவசாயிகள் கண்டனர் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், துணை இயக்குனர்கள் விஸ்வநாதன், ஆல்பர்ட் ராபின்சன், சீனி ராஜ், லதா மகேஷ், ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர்கள் ஜெயராம சௌந்தரி, சசிகுமார், பரமசிவம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×