என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
ரேசன் அரிசி கடத்தியவர் கைது
ரேசன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் அருகே 1,400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி, விளாங்குடி ஆகிய பகுதிகளில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், கடத்தல் தொடர்பான குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது விளாங்குடி கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மினிலாரியை சோதனை செய்தனர்.
இதில் தமிழக அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகத்திட்ட ரேசஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது,
இதனை தொடர்ந்து வாகனத்தின் உரிமையாளரான மேல வரப்பன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கால்நடைகளுக்கான தீவனத்திற்குமாவாக அரைத்து அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பதற்காக கொண்டு செல்வது தெரியவந்தது.
மோகனை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட மினி லாரியை வாகனத்தையும் அதிலிருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசியையும் கைப்பற்றி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






