search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

    சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூ கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன் சின்னத்தம்பி (வயது 26) கூலி தொழிலாளி. 

    இவர் 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் தன்னை காதலிக்க கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு சிறுமி ஒத்துக்கொள்ளாத நிலையில், அவரை மிரட்டியதாகவும், 

    சில மாதங்களுக்கு பின்னர் சின்னத்தம்பி, அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து சின்னத்தம்பியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    Next Story
    ×