என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடந்தது.
    X
    வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடந்தது.

    மணவெளி தொகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

    மணவெளி தொகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடந்தது.
    புதுச்சேரி:

    மணவெளி தொகுதியில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் முன்னிலையில் பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் பயிற்சி பட்டறையில் நடைபெற்றது.
    இந்தக் கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசும்போது கூறியதாவது:-

    தற்போது மணவெளி தொகுதியில் நடைபெற்று வரும் பணிகளான தொகுதி முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அபிஷேகப்பாக்கம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் முடிவுற்று விரைவில் துணை மின் நிலையப் பணிகளை  தொடங்குவதற்கு ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது 

    நல்லவாடு, டி.என். பாளையம், அபிஷேகப்பாக்கம், டி.என். பாளையம் பிரதான சாலை, தவளக்குப்பம், மணவெளி ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலை பணிகள் சுமார் ரூ.5 கோடிக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    அனைத்து தெரு மின்கம்பங்களில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது, தொகுதியில் நிலவிவந்த மின்தடை தற்போது சரி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டதையும், அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை உள்ள தேசிய  நெடுஞ்சாலையை மேம்படுத்தப்பட்ட புதிய தார்சாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.  

    மேலும் தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்தவும் கழிவுநீர் வடிகால் வசதியுடன் கூடிய புதிய தார் சாலைகள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு தொகுதி முழுவதும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் உறுதி கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மணவெளி தொகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, லட்சுமிகாந்தன், சக்திபாலன், தட்சிணாமூர்த்தி, சக்திவேல், ஞானசேகர், ஆனந்தன், எஸ்.வி.எஸ். குமரன், சண்முகம், ஹரி கிருஷ்ணன், ஜெயக்குமார், நாகமுத்து, குருமூர்த்தி, தேவநாதன், முருகன், கிருஷ்ணமூர்த்தி, வீரபாலன், தர்மன், தண்டபாணி, விமல், மனோகர், பிரபாகரன், மணி, அரசன், சக்திவேல், குமரகுரு, முரளி, பச்சையப்பன், அருள்ராஜ், சசி, தீபக் குமார், பூபாலன், அசோக், மணிரத்தினம், குணாநிதி, மகளிர் அணி செல்வி, சுமதி, ரேவதி, வள்ளி, விமலா, வீரம்மாள் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×