என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் ஏழைகளுக்கு நலதிட்ட உதவி வழங்கினார்.
    X
    கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் ஏழைகளுக்கு நலதிட்ட உதவி வழங்கினார்.

    ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

    புதுவையில் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
    புதுச்சேரி, 

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி அலுவலகத்தில் கொண்டா டப்பட்டது.

    கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், இணைசெயலாளர் அன்பானந்தம் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. கொடியேற்றி, பட்டாசு வெடித்து, ஜெயலலிதா படத்துக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. 

    பின்னர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு தள்ளுவண்டி, தையல் எந்திரம், கிரைண்டர், குக்கர், மிக்சி, மின்சார அடுப்பு, வாணலி, பில்டர் ஹீட்டர், கியாஸ் அடுப்பு, ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவைப் பெட்டி, 740 பேருக்கு இலவச வேட்டி, சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில் இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, துணை தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, துணைச்செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ரவி பாண்டு ரங்கன், துணைச்செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி, அன்பழக உடையார், கணேசன், உமா, மூர்த்தி, சேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் பாப்புசாமி,  மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, மாணவரணி செயலாளர் பிரதீப், வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, ஜெயலலிதா பேரவை முன்னாள் துணைச்
    செயலாளர் சித்தானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி முத்தியால்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் இன்று திறந்து வைத்தார். புதிய அலுவலகத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்.& ஜெயலலிதா உருவப்படத் துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து மலர்துவி மரியாதை செலுத்தினார். 
    தொடர்ந்து காந்திவீதி திருக்குறள் மணிக்கூண்டு அருகே வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு வையாபுரிமணிகண்டன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  மாநில மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் புதுவையில் எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைப்போம் என அ.தி.மு.க. நிர்வாகிகளோடு உறுதியேற்றார். 
    பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.  தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிசாமி, ராஜாங்கம், உதயசூரியன், செல்வம், மோகன், முருகேசன், தனஞ்செயன், விஸ்வநாதன், அந்துவான், கண்ணன், குப்பன், மண்ணாங்கட்டி, ஹரிகிருஷ்ணா, நாகராஜ், பிரபா, சிவா, நடராஜ், முத்து, ராதா, தனலட்சுமி, எம்ஜிஆர் பேரவை நிர்வாகிகள் பாஸ்கர், கண்ணையன், சுதாகர், பாலா, ஜெகநாதன், ஜெயசுந்தர் மற்றும் ஊர் பிரமுகர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×