என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மிரட்டலுக்கு அ.தி.மு.க. அஞ்சாது- ஒம்சக்திசேகர் ஆவேசம்
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் மிரட்டலுக்கு அ.தி.மு.க. அஞ்சாது என ஓம்சக்திசேகர் பேசினார்.
புதுச்சேரி:
ஜெயலலிதா பிறந்தநாள்விழா நிகழ்ச்சியில் மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளை எப்போதும் போல மக்கள் நலம் பெறும் வகையில் நாம் கொண்டாடி வருகிறோம். நாம் ஏற்கனவே முடிவு செய்த அடிப்படையில் மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் ஒரு மாதம் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட உள்ளோம்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் அதிக அளவில் நடக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு மிரட்ட பார்க்கின்றனர். ஒரு போதும் மிரட்டல்களுக்கு அ.தி.மு.க. அஞ்சியது இல்லை. இது நமக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கற்று கொடுத்த பாடம் ஆகும்.
தற்போது தமிழகத்தில் தி.மு.க. பெற்ற வெற்றி நிரந்தரமானது அல்ல. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்., அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோரின் ஆசியோடு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமரும், மக்களுக்கு சேவை செய்யும்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் பேசினார்.
Next Story






