என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
லாரி திருட்டு
ஆரியபாளையத்தில் லாரி திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் ஆரிய பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது52). சொந்தமாக லாரி வைத்து புளுமெட்டல் தொழில் செய்து வருகிறார்.
இவருடன் அவரது சகோதரர் அன்பழகன் என்பவரும் சொந்த லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்தநிலையில் சரியாக தொழில் இல்லாத காரணத்தால் அன்பழகனின் லாரியை கடந்த 20 நாட்களாக மதியழகன் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். யாரோ மர்ம நபர் லாரியை ஓட்டி செல்லும் சத்தம் கேட்டது. உடனடியாக மதியழகன் வெளியே வந்து லாரியை விரட்டி சென்றார். ஆனால் மர்ம நபர் லாரியை வேகமாக ஓட்டி சென்று விட்டார்.
பின்னர் பல்வேறு இடங்களில் தேடியும் லாரியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மதியழகன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story






