என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
காவலாளியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல்
பணம் தர மறுத்த கோவில் காவலாளியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி :
பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது53). இவர் மகாத்மாகாந்தி சாலையில் உள்ள ஒரு கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இரவு பணியில் இருந்த போது அதிகாலை 2 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் மது போதையில் வந்தனர். அதில் 2 பேர் சுப்பிரமணியிடம் சென்று பணம் தருமாறு கேட்டனர். அதற்கு தன்னிடம் பணம் இல்லையென சுப்பிரமணி தெரிவித்தார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சுப்பிரமணியை ஆபாசமாக திட்டி அருகில் கிடந்த கல்லால் சரமாரியாக தாக்கினர். மேலும் ஆத்திரம் தீராத அந்த நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியின் தலையில் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் ரத்த காயமடைந்த சுப்பிரமணி சத்தம் போட்டார் அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ள தனியார் நிறுவன காவலாளி அங்கு வரவே அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பின்னர் சுப்பிரமணி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






