என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சீர்காழியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் திரில் வெற்றி

    சீர்காழி 14-வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் திரில் வெற்றி பெற்றார்.
    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தேர்தலில் 14-வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் அருணா, தி.மு.க வேட்பாளர் சிவபிரியா, நாம்தமிழர் கட்சி நித்யா, பா.ம.க மைவிழி, மக்கள் நீதி மய்யம் ரேகா, சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி ஆகிய 6 பேர் போட்டியிட்டனர். 

    இதில் சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி 250 வாக்குகள் பெற்று 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தி.மு.க வேட்பாளர் சிவபிரியா 249 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

    இந்த வார்டில் தபால் வாக்கு 1 செல்லாதவையாக நிராகரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. 

    1 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளரை, சுயேட்சை வேட்பாளர் வென்றிருப்பது 14-வது வார்டில் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது.

    Next Story
    ×