என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    தேசிய தொழிற்சான்றிதழ்களில் திருத்தம் செய்யலாம்

    தேசிய தொழிற்சான்றிதழ்களில் திருத்தம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது

    2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற் சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை

    அதாவது பயிற்சியாளரின் பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சி பெற்ற தொழிற்பிரிவு பெயரில் உள்ள தவறுகள் ஆகிவற்றை திருத்தம் செய்து கொள்ள அடுத்த மாதம் மார்ச் 2ம் தேதி வரையில் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது.

    மேலும், நேரடியாக விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு என்றும், வேறு ஏதும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, தேசிய தொழிற் சான்றிதழ்களில் திருத்தங்கள் இருப்பின் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி எண்.04329-228408, செல்போன் எண்.9499055877 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
    Next Story
    ×