என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சட்டக்கல்லூரி இயங்க நடவடிக்கை திமுக வலியுறுத்தல்
Byமாலை மலர்22 Feb 2022 7:50 AM GMT (Updated: 22 Feb 2022 7:50 AM GMT)
பேராசிரியர்களை நியமித்து சட்ட கல்லூரி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு சட்டக் கல்லூரியில் 10 ஆண்டுக்கும் மேலாக கல்லூரி முதல்வர் உள்ளிட்ட சட்டம் தொடர்பான படிப்புகளை கற்றுத் தரக்கூடிய மொத்தமுள்ள 18 பேராசிரியர் பணியிடங்களில் 10-ம், சட்டம் சாராத படிப்புகளை கற்றுத்தரக்கூடிய 4 பேராசி ரியர் பணியிடங்களில் 3-ம் காலியாக உள்ளது.
பொது நல வழக்கில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் புதுவை பல்கலைக்கழகமும் காலியாக உள்ள கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி விட்டு மாணவர் சேர்க்கையை நிரப்ப உத்தரவிட்டிருந்தது.
ஆனால் புதுவை அரசு, சட்ட கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தியது.
கடந்த 9-ந் தேதிக்கு முன்பு 3 ஆண்டு சட்ட படிப்பில் 37 மாணவர்களையும், 5 ஆண்டு சட்டப்படிப்பில் 30 மாணவர்களையும் கல்லூரி சேர்த்துள்ளது. பல்கலைக்கழகம் 9-ந் தேதி முதலாம் ஆண்டு சேர்க்கையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதனால் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கவர்னர், முதல்-அமைச்சர் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஏதேனும் ஒரு வகையில் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பியும், நூலகம், பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியும், கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் தொடர்ந்து கல்லூரி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X