என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை பத்துகண்ணுவையடுத்த ராமநாதபுரத்தில் பனி பொழிவு காரணமாக வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்பட்டது.
மூடுபனி வாகன ஓட்டிகள் அவதி
புதுவையில் மூடுபனி காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக இரவில் கடும் பனி நிலவுகிறது.
அதிகாலையில் மூடுபனி யால் சாலைகள் முழுவதும் பனி அடர்ந்து இருண்டு காணப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் கோடை வெயில் தொடங்கும். இந்த ஆண்டு பிப்ரவரி முடிவடைய உள்ள நிலையிலும் இரவில் பனிப்பொழிவு உள்ளது.
இன்று காலை வரை வானிலை இருண்டு காணப்பட்டது. கிராமப்புற பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி இருந்தது.
இதனால் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகன ஓட்டிகள் சென்றனர். கடும் பனியால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட சிரமப்பட்டனர்.
Next Story






