என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுச்சேரியில் 22 பேருக்கு கொரோனா
புதுவையில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 15, காரைக்காலில் 6, ஏனாமில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 14, காரைக்காலில் 3, மாகியில் 2 பேர் என 19 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 40, காரைக் காலில் 32, ஏனாமில் 4, மாகியில் 2 பேர் என 78 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 619 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 296 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். புதுவையில் 189, காரைக்காலில் 116, ஏனாமில் 23, மாகியில் 16 பேர் என 344 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 363 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 969 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 69 ஆயிரத்து 840 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






