என் மலர்
உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த ஆடுகள்
கொள்ளிடம் அருகே நாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் சாவு
கொள்ளிடம் அருகே நாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி ஆடுகள் மேய்வது வழக்கம்.
சரஸ்வதிவிளாகம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது 6 ஆடுகளை அங்குள்ள நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறின.
இதனால் ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி ஆடுகள் மேய்வது வழக்கம்.
சரஸ்வதிவிளாகம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது 6 ஆடுகளை அங்குள்ள நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறின.
இதனால் ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






