search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கடலில் மூழ்கி வாலிபர் பலி

    கடலில் மூழ்கி பெங்களூர் வாலிபர் பலியானார்.
    புதுச்சேரி :

    பெங்களூரைச் சேர்ந்தவர் விநாயகா (வயது 26).  இவர் தனது நண்பர்கள் 8 பேருடன் புதுவைக்கு  சுற்றுலா வந்தார்.

     அவர்கள் புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இன்று காலை தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடலில் இறங்கி குளித்தனர்.  கடலில் குளித்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் விநாயகா கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார்.

     இதனையறிந்த   அவரது நண்பர்கள் அலறல் சத்தம் போட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் விநாயகாவை  காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்த பெரியகடை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடலில் மூழ்கி மாயமான விநாயகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

     சிறிது நேர தேடலுக்குப் பின்னர் விநாயகத்தை மீட்டனர். பின்னர் அவரை புதுவை  அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

     இதுகுறித்து விநாயகாவின் நண்பர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்,  சப்&இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    Next Story
    ×