என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காவலாளி மூச்சு திணறி சாவு

    காட்டேரிக்குப்பத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு காவலாளி இறந்து போனார்.
    புதுச்சேரி: 

    புதுவை காட்டேரிகுப்பம் அன்னை ராணி பள்ளி வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது45). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா(37). இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு  மகன் உள்ளார்.

    இந்த நிலையில்   வெங்க டேசன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினார்.   அதிகாலை 5 மணியளவில் திடீரென வெங்கடேசனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரது மனைவி விஜயா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு காட்டேரிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். 

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக  ஆம்பு லன்ஸ் மூலம் ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து அவரது மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் காட்டேக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×