என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் வாக்களிக்க வந்த தி.மு.க. வேட்பாளரை நாய் கடித்தது
    X
    பெரம்பலூரில் வாக்களிக்க வந்த தி.மு.க. வேட்பாளரை நாய் கடித்தது

    பெரம்பலூரில் வாக்களிக்க வந்த தி.மு.க. வேட்பாளரை நாய் கடித்தது

    வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்த பெரம்பலூர் நகராட்சி 17-வது வார்டு தி.மு.க. வேட்பாளரை நாய் கடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சி 17-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக துரை.காமராஜ் களத்தில் உள்ளார். இன்று காலை அவர் அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மையத்திற்கு தனது வாக்கு செலுத்துவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார். 

    அப்போது வாக்குச்சாவடி முன்பு படுத்திருந்த நாய் திடீரென்று வேட்பாளர் துரை.காமராஜ் மீது பாய்ந்து கடித்தது. இதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
    Next Story
    ×