என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
கிராம உதவியாளரை தாக்கியவர் மீது வழக்கு
கிராம உதவியாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை(வயது 50).
நேற்று அண்ணாதுரை பணியில் இருந்தபோது அதே ஊரை சேர்ந்த சகாய வின்சென்ட்ராஜ்(45) என்பவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அவர், தான் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலம் ஆகிறது, ஏன் வரவில்லை என்று கேட்டு அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றிய நிலையில் சகாய வின்சென்ட்ராஜ் அண்ணாதுரையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அண்ணாதுரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாதுரை கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாய வின்சென்ட்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






