என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
பெரம்பலூரில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆனந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை பயிற்சி மையத்தில் பெண்களுக்கான தையல்கலை மற்றும் ஆரி, மகம் வேலைப்பாடு பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி 21ம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது.
இதற்கு வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பயிற்சியின் காலஅளவு 30 நாட்கள். பயிற்சிநேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழி காட்டப்படும். நகராட்சி ,பேரூராட்சி சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபால புரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு செய்து பிப்ரவரி 21ம் தேதி நடக்கும் பயிற்சியில் கலந்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, 9488840328 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக அலுவலக நேரத்தில் காலை 10.00 முதல் 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆனந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை பயிற்சி மையத்தில் பெண்களுக்கான தையல்கலை மற்றும் ஆரி, மகம் வேலைப்பாடு பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி 21ம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது.
இதற்கு வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பயிற்சியின் காலஅளவு 30 நாட்கள். பயிற்சிநேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழி காட்டப்படும். நகராட்சி ,பேரூராட்சி சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபால புரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு செய்து பிப்ரவரி 21ம் தேதி நடக்கும் பயிற்சியில் கலந்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, 9488840328 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக அலுவலக நேரத்தில் காலை 10.00 முதல் 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






