என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

    மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆர். எஸ். மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது56). இவர் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் ஜெயராமன், இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொடர்பான வார்த்தைகளை பேசுவது, பாலியல் ஆசைகளை தூண்டுவது, பாலியல் சீண்டல் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.  அவர்கள் மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
    Next Story
    ×