search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம்
    X
    பணம்

    டாஸ்மாக் ஊழியரிடம் ரூ 2 லட்சம் பறிமுதல்

    விருதுநகரில் நடந்த வாகன சோதனையில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    விருதுநகர்

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க மாநிலம் முழுவதும் அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதன்படி விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பில் தனிப்படை தாசில்தார் பொன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக  மோட்டார் சைக்கிளில் வந்த விருதுநகர் பரங்கிரிநாதபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது44) என்பவரை மறித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 560 ரொக்கம் இருந்தது. ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. 

    இதுகுறித்து விசாரணை நடத்தியதில், சரவணக்குமார் விருதுநகர் பழைய பஸ்நிலைய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருவதும், மது விற்ற பணத்தை கொண்டு செல்லும்போது சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது. 

    உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது.உரிய ஆவணங்களை காண்பித்து அதனை பெற்றுச்செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×