என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பிளாஸ்டிக் கடை எரிந்து நாசம்

    பெரம்பலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் கடை எரிந்து நாசமானது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் எம்.வி.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது 38).இவர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2வது தளத்தில்  சூப்பர் பஜார் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

    முதல் தளத்தில் அலங்காரப் பொருட்களும், 2வது தளத்தில் பிளாஸ்டிக் பொருட்களும் விளையாட்டு பொம்மைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கடையை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இரவு 10 மணியளவில் 2ம் தள கட்டிடத்தின் வலது பக்கத்தில் உள்ள ஜன்னல் வழியாக தீ பிடித்து எரிவதை பார்த்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் தீ அணைக்கப்பட்டது.

    எரிந்து சேதமடைந்த பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ரூ 2 லட்சம் ஆகும்.  மேலும் இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    தீ பிடித்ததற்கான காரணம் மின்கசிவு ஆக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×