என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    புதிய பஸ் நிலையம் அருகே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையம் அருகே ராஜாநகர் அய்யனார் கோவில் தெருவில் ஒரு டீக்கடை அருகே தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் சாதாரண உடையில் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் 3 நம்பர் லாட்டரி முடிவுகளை தெரிவித்துக்கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது59) என்பதும், இவர் டீக்கடையில் வேலை பார்த்துக்கொண்டே தனது கூட்டாளி ராஜாராம் உதவியுடன் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டு, செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ-.810 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    மேலும் ஆறுமுகத்தின் கூட்டாளியான ராஜாராமனை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×