என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிறந்து ஒரு மாதம் ஆன குட்டியானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதம் ஆன குட்டியானை உயிரிழப்பு
மாயாற்றிற்கு அருகே வனத்தில் குட்டியானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முது மலை புலிகள் காப்ப கம், மசினகுடி வெளிமண்ட லத்திற்கு உட்பட்ட சீகூர், தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானை கள் வாழ்ந்து வருகின்றன.
சிங்காரா வனச்சரகத்திற் குட்பட்ட வனப்பகுதியில் நேற்று வனத்துறை ஊழி யர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாயாற்றிற்கு அருகே வனத்தில் குட்டியானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் இறந்த கிடந்த யானையை சோதனை மேற்கொண்டனர். அப்போது இறந்து கிடந்தது பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானை என்பது தெரியவந்தது.
மேலும் குட்டி யானையின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story






