என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெமிலி அருகே வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கும்பல்

    மிலி அருகே வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பள்ளூர் கிராமம் சாவடித்தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் வடிவேல் (வயது 38). 

    இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்குவதற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சத்தம் வரவே வெளியே வந்து பார்தார். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பேர் பைக்கை லாவகமாக தூக்கி சென்றனர். இதைப் பார்த்து வடிவேல் சத்தம் போட்டுள்ளார்.

    அப்போது பைக்கின் மீது வாட்டர் கேனில் தயாராக வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு 4 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×