என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கொரோனாவுக்கு ஒருவர் பலி
புதுவையில் கொரோனாவுக்கு ஒருவர் பாலியாகியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் 874 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 40, காரைக்காலில் 11, மாகியில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 26, காரைக்காலில் 12, ஏனாமில் 1, மாகியில்2 பேர் என 41 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 191, காரைக்காலில் 99, ஏனாமில் 26, மாகியில்3 பேர் என 319 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 295 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 549, காரைக்காலில் 365, ஏனாமில் 57, மாகியில்17 பேர் என 988 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது ஆயிரத்து 29 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 56 ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






