என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு காட்சி...
    X
    கோப்பு காட்சி...

    பெண்களை சாம்பார் வாளியால் தாக்கிய கும்பல்

    திருமண வரவேற்பு விழாவில் பெண்களை சாம்பார் வாளியால் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே நாணமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவரது மனைவி லட்சுமி (வயது32).  இவரது தம்பி கலைவாணனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.  அதற்காக விருந்து தயார் செய்யப்பட்டது. 

    அப்போது அங்கு வேலை செய்யும் பெண்கள் சிலர் சமையல் பொருட்களை திருடி மறைத்து வைத்தனர். இதனை கண்ட லட்சுமி அவர்களை தட்டிக்கேட்டு சமுதாய நலக்கூட மேலாளர் நாகையனிடம் முறையிட்டார். இதில்  லட்சுமி தரப்பினருக்கும், சமுதாய நலக்கூடத்தில் வேலை செய்யும் பெண்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து  திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நல்லப்படியாக முடிக்க லட்சுமி தரப்பினர் அதற்கான வேலையில் ஈடுபட்டனர். இரவு 11 மணியளவில் அனைவரும் சாப்பிட்ட பின்னர் ஓரு கும்பல் திடீரென சமுதாய நலக்கூடத்தில் புகுந்தது. அவர்கள் உணவு பரிமாறு கேட்டனர். அதற்கு சாம்பார் மட்டுமே உள்ளது என்று லட்சுமி தெரிவித்தார்.

    ஏற்கனவே சமையல் பொருட்களை திருடியதாக லட்சுமி குற்றம் சாட்டியிருந்ததால் ஆத்திரமடைந்த கும்பல் லட்சுமியை சாம்பார் வாளியால் தாக்கினர். இதனால் லட்சுமி அலறினார். இந்த சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலிடம் தட்டிக் கேட்டனர்.

    ஆனால் அந்த கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டி லட்சுமியின் அக்காள் மஞ்சுளா மற்றும் அவரது மகள் நந்தினி ஆகியோரையும் பீர் பாட்டிலால் தாக்கினர். மேலும் நந்தினியின் ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்ய முயன்றனர்.

    இதையடுத்து உறவி னர்கள் திரளவே அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த லட்சுமி அவரது அக்காள் மஞ்சுளா மற்றும் அவரது மகள் நந்தினி ஆகிய 3 பேரும் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து லட்சுமி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்களை தாக்கிய கும்பலை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×