என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பிரசாரம்
    X
    தி.மு.க. வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பிரசாரம்

    மறைமலைநகர் 12-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பிரசாரம்

    பாலாறு குடிநீர் திட்டம் (நபர் ஒருவருக்கு 200 லிட்டர்) என்ற அளவில் மேம்படுத்தபட்ட சுகாதாரமான குடி நீர் ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் வழங்கப்படும்.

    செங்கல்பட்டு:

    மறைமலை நகராட்சி 12-வது வார்டில் தி.மு.க. சார்பில் மறைமலை நகர செயலாளர் ஜெ.சண்முகத்துக்கு ஆதரவாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ, காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆராமுதன் மற்றும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் எம்.டி.சண்முகம், ஏ.ஜெ.ஆறுகுகம், ஜெ.வி.எஸ்.ரங்கநாதன், கே.எஸ்.ரவி, டி.குணா மற்றும் கழக தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்.

    அப்போது தி.மு.க. வேட்பாளர் ஜெ.சண்முகம் 12-வது வார்டில் உள்ள வாக்காளர் மத்தியில், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற்றதும் மறைமலை நகராட்சி அனைத்து வார்டு பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு நகராட்சி பூங்காக்களுக்கு பயன் படுத்தப்படும்.

    அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பொது உள் சுற்று போக்குவரத்து ஏற்படுத்தப்படும்.

    பழவேளி பாலாறு குடிநீர் திட்டம் (நபர் ஒருவருக்கு 200 லிட்டர்) என்ற அளவில் மேம்படுத்தபட்ட சுகாதாரமான குடி நீர் ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் வழங்கப்படும்.

    வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மறைமலை நகரில் நவீன அழகு பொருள் அங்காடிகள் உருவாக்கப்படும். மறைமலை நகர் மக்கள் நலன்காக்கும் வகையில் நகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இரு கரம் கூப்பி கேட்டுக் கொண்டார். மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக் களிப்பதாக உறுதி கூறினர்.

    Next Story
    ×