search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிடாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    X
    பிடாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    கீழையூரில் பிடாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

    செம்பனார்கோவில் அருகே உள்ள கீழையூரில் கீழையூரில் பிடாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கீழையூர் கிராமத்தில் சப்தமாதா உடனாகிய பிடாரி அம்மன் கோவில் உள்ளது.
     
    வடக்கு திசை நோக்கி சப்த மாதாக்களோடு பிடாரி அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் பிரம்மதேவரால் பூஜிக்கப்பட்டு கன்ம மகரிஷி வழிபட்ட கோவிலாகும். 

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவையொட்டி யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக மூன்று கால யாகசாலை பூஜை நடந்தது.
     
    4-ம் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹீதிக்குப்பின் கடங்களை வேதவிற்பனர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். 

    அப்போது மழை பெய்ததால் பக்தர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×