என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்10 Feb 2022 10:56 AM GMT (Updated: 10 Feb 2022 10:56 AM GMT)
கர்நாடகாவுக்கு 3 டன் ரேஷன் அரிசியை கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், மற்றும் பூவரசன், தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை, தளி அடுத்த ஜவளகிரி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே வந்த பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டதில், 60 மூட்டைகளில், 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம், கனகபுரா கொலகாண்டஹள்ளி பகுதியை சேர்ந்த மகேந்திரன்(வயது 30), அவரது தம்பி சூர்யா(28) என்பதும், அவர்கள் தளி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது.
பிக்வேன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X