என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சோளிங்கரில் பைக் விபத்தில் வாலிபர் பலி

    சோளிங்கர் அருகே பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமம் அருந்ததியர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (22). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். 

    இவர் நேற்று முன்தினம் இரவு காவேரிப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். 

    மங்கலம் கிராமம் அருகே பைக்கில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த குமார் (42). என்பவரின் சைக்கிள் மீது  பைக் மோதியது. இதில் சைக்கிளில் சென்ற குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

    ஆனால் பைக்கில் வந்த பார்த்திபன் பலத்த காயமடைந்து மயக்கம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×