என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு முதியவர் பலி

    கொரோனாவுக்கு ஏனாமை சேர்ந்த முதியவர் பலியானார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 102, காரைக்காலில் 36, ஏனாமில் 22, மாகியில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 34, காரைக்காலில் 16, ஏனாமில் 5, மாகியில் 3 பேர் என 58 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 619, காரைக்காலில் 80, ஏனாமில் 34, மாகியில் 8 பேர் என 741 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 922 பேர் கொரோனா தொற்றால்   பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 460 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் ஆயிரத்து 473, காரைக்காலில் 825, ஏனாமில் 129, மாகியில் 21 பேர் என 2 ஆயிரத்து 448 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 2 ஆயிரத்து 506  பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். 

    ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 69 வயது முதியவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 50 ஆயிரத்து 874 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.
    Next Story
    ×