என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதப்படுத்தப்பட்ட மீன்களால் ஆன சிற்பங்கள்
    X
    பதப்படுத்தப்பட்ட மீன்களால் ஆன சிற்பங்கள்

    பதப்படுத்தப்பட்ட மீன்களால் ஆன சிற்பங்கள்- வீராம்பட்டினம் இளைஞரின் கைவண்ணம்

    குபேந்திரன் திறமையை பாராட்டி சரியான அங்கீகாரத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    அரியாங்குப்பம்:

    மீன்களை கொண்டு பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய கலை மீன் சிற்பம் வரைந்து அனைவரையும் கவர்ந்து வருகிறார், குபேந்திரன் (வயது 29).

    இவர் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். மீனவரான இவர் கலைத் துறையில் 2 பட்டப்படிப்புகளை முடித்து உள்ளார். ஓவியம் மற்றும் சிற்ப துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு திறமைகளை காட்டி வருகிறார்.

    இவரது படைப்புகளின் கண்காட்சி கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பிரசித்தி பெற்றதாகும். இதில், தனித் திறமையாக மீனவர்களின் வாழ்க்கையை ஆய்வாகவே கொண்டு செயல்படுகிறார்.

    அதாவது, மீனவர்களின் வாழ்க்கை தாக்கத்தை ஓவியம் மற்றும் சிற்பங்களாக வடிப்பதில் குபேந்திரன் கில்லாடி ஆவார். குறிப்பாக மீன்களைக் கொண்டு உருவாக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் பேசும்.

    ஓவியம் மற்றும் சிற்பத்தில் புதிய முயற்சியாக பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீனவர் வாழ்வியலை கலை வடிவில் அளித்து வருகிறார்.

    மீன்களைக் கொண்டு ஒரு சிற்பத்தை உருவாக்க ஒன்றரை மாதம் தேவைப்படுகிறது. இந்த சிலை மற்றும் ஓவியங்கள் போல் சுற்றுலா பயணிகள் வேறு எங்கும் பார்க்க வாய்ப்பில்லை. கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன்களை உரிய முறையில் பதப்படுத்தி சிற்பங்களாக வடிக்கிறார். கலைத்துறையில் இதுபோன்று இதுவரை யாரும் செய்ததில்லை. இதனை வெளிநாட்டவரும் கண்டு பாராட்டி சிலைகளை வாங்கி செல்கின்றனர்.

    மீனவர்களின் வாழ்க்கையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் இந்த முயற்சியை தனிநபராக செய்து வரும் தான் விரைவில் இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுத்து உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பமாக கூறுகிறார், குபேந்திரன்.

    இவரது திறமையை பாராட்டி குபேந்திரனுக்கு சரியான அங்கீகாரத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    Next Story
    ×