என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கேளம்பாக்கம் அருகே கை, கால்களை கட்டி வாலிபர் கொடூர கொலை
Byமாலை மலர்9 Feb 2022 7:58 AM GMT (Updated: 9 Feb 2022 7:58 AM GMT)
கை, கால்களை கட்டி வாலிபரை கொடூரமாக கொன்று உடலை கொலைக் கும்பல் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியில் பக்கிங்காம் கால்வாயும் அதையொட்டி உப்பளமும் உள்ளது.
இந்த உப்பளக் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மகுடேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவரது தலையில் கல்லால் தாக்கிய காயங்கள் காணப்பட்டன. மேலும் அவரது கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அவரது வலது கையில் பெரிய அளவில் சிலுவை பச்சை குத்தப்பட்டு இருந்தது.
உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது.
மர்ம கும்பல் அவரை கடத்தி வந்து கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரமாக அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது. மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக உடலை உப்பளக்கால்வாயில் கொலையாளிகள் வீசி சென்று உள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம், கல்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த ஒரு வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் பின்னரே கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.
கை, கால்களை கட்டி வாலிபரை கொடூரமாக கொன்று உடலை கொலைக் கும்பல் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியில் பக்கிங்காம் கால்வாயும் அதையொட்டி உப்பளமும் உள்ளது.
இந்த உப்பளக் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மகுடேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவரது தலையில் கல்லால் தாக்கிய காயங்கள் காணப்பட்டன. மேலும் அவரது கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அவரது வலது கையில் பெரிய அளவில் சிலுவை பச்சை குத்தப்பட்டு இருந்தது.
உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது.
மர்ம கும்பல் அவரை கடத்தி வந்து கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரமாக அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது. மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக உடலை உப்பளக்கால்வாயில் கொலையாளிகள் வீசி சென்று உள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம், கல்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த ஒரு வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் பின்னரே கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.
கை, கால்களை கட்டி வாலிபரை கொடூரமாக கொன்று உடலை கொலைக் கும்பல் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X