என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
    X
    நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

    நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    பரசலூர் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அடுத்த பரசலூர் கிராமம், மகாராஜாபுரம் திலகவதியார் தெருவில் அமைந்துள்ளது பழமையான ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில். 

    சுயம்புவாய் தோன்றி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் நாகாத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் பஞ்சவர்ண பூச்சுடன் நிறைவு செய்யப்பட்டது.

    இதையடுத்து இரன்டு கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய மூன்றாம் நாள் காலை பூஜையில் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு கோவிலை வலம் வந்தது. 

    வானவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க, வேதவிற்பனர்கள் மந்திரங்கள் ஓத, வானத்தில் கருடன் வட்டமிட பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி நாகாத்தம்மா என கோஷங்கள் எழுப்ப விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து கருவரையில் உள்ள நாகாத்தம்மன் உருவத்துக்கு புனித நீரை ஊற்றி அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் அபிஷேகம் செய்து மஹா தீபம் காண்பிக்கப்பட்டு. 

    அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கிருஷ்ணன் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×