search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாடலீஸ்வரருக்கு சிறப்பு தீர்த்தவாரி
    X
    பாடலீஸ்வரருக்கு சிறப்பு தீர்த்தவாரி

    கடலூர் தென்பெண்ணை ஆற்றில் பாடலீஸ்வரருக்கு சிறப்பு தீர்த்தவாரி

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் இன்று ரதசப்தமி முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி தாயாருக்கு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆற்றுத் திருவிழா, ரத சப்தமியன்று தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரியும், தை அமாவாசை மற்றும் மாசி மகத்தன்று கடலில் சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    இன்று ரதசப்தமி முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி தாயாருக்கு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து சாமி ஊர்வலமாக கொண்டு வந்து கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து சாமிக்கு கலச பூஜை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவிலில் சாமி நிலை அடைந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
    Next Story
    ×