என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 141 வார்டுகளில் 522 பேர் போட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி, 5 பேரூராட்சிகளில் 153 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. தொடர்ந்து 5-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. நேற்று தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் வேட்பு மனு வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளில் 72 வார்டுகளுக்கான பதவிகளுக்கு 400 பேர் மனுக்கள் அளித்தனர்.
இதில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 109 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். அதன்படி 72 வார்டுகளில் 278 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர் பேட்டை, வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளில் 81 வார்டுகளில் 397 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று 125 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
மேலும் சங்கராபுரம் பேரூராட்சி 4 பேரும், தியாகதுருகம் பேரூராட்சி ஒருவரும், வடக்கநந்தல் பேரூராட்சியில் 7 பேரும், ஆக மொத்தம் தி.மு.க. வை சேர்ந்த 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் 5 பேரூ ராட்சிகளில் உள்ள 81 வார்டுகளில் 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 69 வார்டுகளில் 244 பேர் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி, 5 பேரூராட்சிகளில் 153 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 141 வார்டுகளில் 522 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. தொடர்ந்து 5-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. நேற்று தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் வேட்பு மனு வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளில் 72 வார்டுகளுக்கான பதவிகளுக்கு 400 பேர் மனுக்கள் அளித்தனர்.
இதில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 109 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். அதன்படி 72 வார்டுகளில் 278 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர் பேட்டை, வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளில் 81 வார்டுகளில் 397 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று 125 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
மேலும் சங்கராபுரம் பேரூராட்சி 4 பேரும், தியாகதுருகம் பேரூராட்சி ஒருவரும், வடக்கநந்தல் பேரூராட்சியில் 7 பேரும், ஆக மொத்தம் தி.மு.க. வை சேர்ந்த 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் 5 பேரூ ராட்சிகளில் உள்ள 81 வார்டுகளில் 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 69 வார்டுகளில் 244 பேர் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி, 5 பேரூராட்சிகளில் 153 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 141 வார்டுகளில் 522 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Next Story






