என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ராணிப்பேட்டையில் வாக்குபதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு தேதி மாற்றம்
ராணிப்பேட்டையில் வாக்குபதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு தேதி மாற்றம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்து.
நிர்வாக காரணங்களுக்காக 10-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும். வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதே இடத்தில் மற்றும் நேரத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
Next Story






