என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் தகுதி தேர்வுக்கு கணவருடன் வந்த புதுபெண்.
    X
    போலீஸ் தகுதி தேர்வுக்கு கணவருடன் வந்த புதுபெண்.

    திருமணம் முடிந்த அன்றே போலீஸ் தேர்வுக்கு வந்த புதுப்பெண்

    புதுவையில காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியர்கள், 29 டெக்ஹேண்ட்லர் என மொத்தம் 431 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
    புதுச்சேரி:

    போலீஸ் பணிக்கு விண்ணப்பித்த ஆண்களுக்கான உடற் தகுதி தேர்வு கடந்த 8-ந் தேதி தொடங்கியது. ஆண்களுக்கான உடற் தகுதி தேர்வு முடி வடைந்தது.

    இதனை தொடர்ந்து பெண்களுக்கான உடற் தகுதி தேர்வு  தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.

    போலீஸ் பணிக்கு மதகடிப்பட்டு அருகே உள்ள பி.எஸ்.பாளையத்தை சேர்ந்த  பி.பி.ஏ. பட்டதாரியான பிரவிணா (25) விண்ணப்பித்து இருந்தார்.

    அவருக்கு  உடற் தகுதி தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரவிணாவுக்கும் கிளியனூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஹரி பிரசாத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இவர்களது திருமணம் அங்குள்ள சிவன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் பிரவிணா தான் போலீஸ் தகுதி தேர்வுக்கு செல்ல வேண்டும் என மணமகன் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

    அதற்கு   அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமணம் முடிந்தவுடன்  பிரவிணா புதுவை கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற  போலீஸ் தகுதி தேர்வில் பங்கேற்க வந்தார்.

    அவருடன் கணவர் ஹரி பிரசாத்தும் வந்து இருந்தார்.முன்னதாக மணமகனின் உறவினர்கள் பிரவிணாவுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர். போலீஸ் தேர்வில் பங்கேற்க வந்த பிரவிணாவுக்கு தேர்வுக்கு வந்த மற்ற பெண்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
    Next Story
    ×