என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரணியில் ஈடுபட்ட காங்கிரசார்.
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், செந்துறையில், மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
தேர்தலின் போது பா.ஜ.க. அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஒடுக்கும் செயலில் ஈடுபடுவ தைக்கண்டித்தும்,
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்தும். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே பெயரில் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்த இந்த மகா சபையினரை கண்டித்தும் இந்த பேரணி நடைபெற்றது.
பேரணியானது, செந்துறை பேருந்து நிலையத்தில் தொடங்கி பிரதானகடை வீதி வழியாகச் சென்று காமராஜர் சிலை முன்பு நிறைவடைந்தது.
பேரணிக்கு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செந்துறை மேற்கு வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவர் மணிரத்தினம் கண்டன உரையாற்றினார். இதில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story






