என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கருடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட காட்சி.
    X
    வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கருடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட காட்சி.

    வாலாஜா தன்வந்திரி பீடத்தில் கருடன் சிலை பிரதிஷ்டை

    வாலாஜா தன்வந்திரி பீடத்தில் கருடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அடுத்த கீழ்ப்புதுப் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கடந்த 4-ந் தேதி பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டா வைபவ கால பூஜைகள் தொடங்கப்பட்டது. 

    5-ந் தேதி (சனிக்கிழமை) மூலவர் விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு நவகலச திருமஞ்சனம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து மேட்டூர் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நேற்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் 21 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடர் பிரதிஷ்டா வைபவத்தை முன்னிட்டு விஸ்வரூபம், கோ பூஜை, த்வார பூஜை, கும்ப, மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்தான பூஜை, மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, கும்ப உத்தாபனம், நூதன பிம்பத்திற்கு ப்ரோக்ஷம், ப்ராணப் பிரதிஷ்டை, தீபாராதனை, சாத்துமுறை நடைபெற்றது. 

    ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சாமிகள் 1000 கிலோ புஷ்ப அபிஷேகம் செய்தார். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

    இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    Next Story
    ×