search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
    X
    தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

    காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் சிவக்குமார் (வயது25).   ரீவைண்டிங் செய்யும் கடை நடத்தி வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த வினோதினி என்ற பெண்ணை 2 வருடமாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  

    இதனால்  சம்பவ தன்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், சமயபுரம் கோவிலுக்கு சென்று, அங்கு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய இவர்கள், பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே தனது மகளை காணவில்லை என வினோதினியின் பெற்றோர் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.

    இந்நிலையில் மணமக்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது தெரியவந்துள் ளதை தொடர்ந்து,  மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த வினோதினியின் பெற்றோர் தங்களுக்கும் தங்களது மகளுக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லை எனக்கூறி எழுதிக் கொடுத்தாக கூறப்படுகிறது.

    பின்னர் போலீசார் காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி இவரையும் சந்தோஷமாக வழி அனுப்பிவைத்தனர்.
    Next Story
    ×