என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அருப்புக்கோட்டை அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்7 Feb 2022 6:18 AM GMT (Updated: 7 Feb 2022 6:18 AM GMT)
போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பாலையம்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் நாகலாபுரம் அருகே உள்ள ஸ்ரீரங்கபுரத்தை சேர்ந்தவர் மல்லிச்சாமி (வயது 35). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
பந்தல்குடி போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் தனது மனைவி மீனா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மல்லிச்சாமி மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் தகராறு நடந்ததாக தெரிகிறது.
இதனால் மல்லிச்சாமி நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு போலீஸ்காரரின் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. அந்த வீட்டில் அவர் மட்டும் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த வீட்டில் போலீஸ்காரர் மல்லிச்சாமி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மல்லிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மல்லிச்சாமி எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. குடும்பத்தகராறு காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் நாகலாபுரம் அருகே உள்ள ஸ்ரீரங்கபுரத்தை சேர்ந்தவர் மல்லிச்சாமி (வயது 35). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
பந்தல்குடி போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் தனது மனைவி மீனா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மல்லிச்சாமி மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் தகராறு நடந்ததாக தெரிகிறது.
இதனால் மல்லிச்சாமி நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு போலீஸ்காரரின் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. அந்த வீட்டில் அவர் மட்டும் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த வீட்டில் போலீஸ்காரர் மல்லிச்சாமி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மல்லிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மல்லிச்சாமி எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. குடும்பத்தகராறு காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X