என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வாழப்பாடி அருகே சென்னை அரசு விரைவு பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

    வாழப்பாடி அருகே சென்னை அரசு விரைவு பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    வாழப்பாடி:

    சென்னையில் இருந்து அரசு விரைவு போக்கு வரத்துக் கழக சொகுசு பஸ் நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வாழப் பாடி வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டி ருந்தது. பஸ்சை டிரைவர் கள்ளக்குறிச்சி பாண்டலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 43) ஓட்டினார். கண்டக்டராக செல்வராஜ் (45) என்பவர் இருந்தார். மேலும் பஸ்சில் 42 பயணிகளும் இருந்தார்கள்.

    பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் சேலம்- சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி தாலுகா அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட டிரைவர் முயன்றார்.

    அப்போது எதிர் பாராதவிதமாக கட்டுப்பாடு இழந்த பஸ் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்தவர்கள் கூச்சல் போட்டு அபயக்குரல் எழுப்பினர். இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். 22 பேர் லேசான காயமடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான பஸ் கண்ணாடிகளை உடைத்து, பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர்.

    பின்பு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி மற்றும் சேலம் அரசு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், வாழப்பாடி சேலம்-சென்னை புறவழிச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×