என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விஜய்-ரங்கசாமி சந்திப்பில் உள்நோக்கம் ஏதுமில்லை- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

    நடிகர் விஜய்-, முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்திப்பில் எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு புதுவை மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. பட்ஜெட் தொடர்பாக எங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை மத்திய மந்திரி நிர்மலாசீத்தாராமனிடம் தெரிவித்துள்ளோம். 

    7-வது சம்பள கமிஷன் அரியர் தொகை ரூ.230 கோடியில் ரூ.150 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. 

    மத்திய அரசு திட்டங்க ளுக்கும் முழு நிதி அளிக்கப்படுகிறது. கடந்த காலங்களை விட கூடுதலாக மத்திய அரசு நிதி அளித்துள்ளது. மேலும் கூடுதலாக நிதி தர கேட்டுள்ளோம். 

    ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் உள்ளார். அவர் நடிகர் விஜய்யை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. விஜய் சந்திப்பு தொடர்பான யூகங்களுக்கு பதில் தர முடியாது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இலவச அரிசி 75 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜிப்மரின் செயல்பாடுகளை ஆய்வுசெய்ய மத்திய சுகாதார மந்திரி புதுவைக்கு நேரடியாக வர உள்ளார். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×