என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி கடத்த பயன்படுத்திய கார்.
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி கே.புரந்தர தாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு எருதூர்கடை பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று சாமியார்மடம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
ஆனால் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 700 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார் ? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story






