search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தல்  பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும்    இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    அரியலூர் கலெக்டர் அலுவலக  கூட்டரங்கில்  நடைபெற்ற தேர்தல் பணிகள் தொடர்பான அரசு  அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில்  அவர் மேலும் பேசியதாவது:
     
    வாக்குப் பதிவு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, சாய்தள மேடை வசதி, வீல்சேர், கழிவறை வசதி உள் ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

    இதில் ஏதேனும் குறை பாடுகள் இருந்தால் அதனை உடனடியாக  சரி  செய்ய வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தவறாமல் கலந்து கொண்டு முறையாக  பயிற்சி பெற வேண்டும். அனைவரும் தவறாமல் கோவிட் தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத் தியதை உறுதி செய்திடவேண்டும்.

    தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்து வேட்பாளர்களுக்கும்   முறையாக எடுத்துரைப்பதுடன் தேர்தல் விதிமுறைகள்    முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றார்.
    கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி  முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  சு.சுந்தர்ராஜன், மகளிர்   திட்ட அலுவலர் சிவக்குமார்,  நகராட்சி ஆணையர்கள் அரியலூர் சித்ரா சோனியா, ஜெயங் கொண்டம்  சுபாஷினி  மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
    Next Story
    ×