search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.
    X
    தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

    மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காவிரி இல்லத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 
    முன்னிட்டு, மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர், இயக்குநர் மின்ஆளுமை முகமை விஜயேந்திர பாண்டியன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இரா.லலிதா முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் மயிலாடுதுறை காவேரி இல்லத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரிலோ அல்லது 9344450337 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புக் கொண்டு தேர்தல் தொடர்பாக தகவல் அல்லது புகார்களை தெரிவிக்கலாம். 

    மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை சீர்காழி என 2 நகராட்சிகளும். மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் 
    ஆகிய 4 பேரூராட்சிகளும் உள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-2022-ல் மயிலாடுதுறை மாவட்டத்தில் 
    72846 ஆண் வாக்காளர்கள் 77077 பெண் வாக்காளர்கள் மற்றும் 15 இதர வாக்காளர்கள் ஆக மொத்தம் 1,49,938 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சிகளில் 60 வார்டுகளும், பேரூராட்சிகளில் 63 வார்டுகளும் கூடுதலாக 123 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் 182 வாக்குச்சாவடிகள் உள்ளது. 

    வாக்குச்சாவடிகள் 71 அமைவிடங்களில் உள்ளது. 182 வாக்குச்சவாடிகளில் 
    54 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்படவுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் கீழ்காணும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

    நகராட்சிகள், பேரூராட்சிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களாக மயிலாடுதுறை தருமபுரம் ஞாணாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மயிலாடுதுறை. சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளி, சீர்காழி. குத்தாலம் திவான் பகதூர் தி.இ.ரெங்காச்சாரி தேசிய மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை. மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில்.
    தேர்தலில் 6 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் மற்றும் 16 உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    தேர்தலில் 6 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. 

    தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணித்திட 14 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் ஒரு நகர்புற உள்ளாட்சி அமைப்பிற்கு 3 பறக்கும் படை குழு வீதம் (ஒரு குழுவிற்கு 8 மணி நேரம் என சுழற்சி முறையில்) 18 குழுக்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்க்கொள்ள மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலராக மயிலாடுதுறை துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பிரதாப்குமார், வட்டார அளவிலான பொறுப்பு அலுவலர்களாக அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டார பார்வையாளரர்களாக துணை கலெக்டர் நிலையில் 6 பேரும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    மேலும் தேர்தல் பணியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்கு அனைத்து வேட்பு மனு பெறப்படும் இடங்களிலும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 
    182 வாக்குச்சாவடி மைங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

    இக்கூட்டத்தில் தேர்தல் வட்டார பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
    Next Story
    ×