என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீமிதி திருவிழா நடந்தது.
தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
செம்மங்குடி தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் உள்ள தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தை மாத தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 26-ந்தேதி கொடி ஏற்றப்பட்டு காப்பு கட்டி தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்
அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து தீமிதி உற்சவ திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை காளியம்மன் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து கோயிலை அடைந்தனர்.
மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து மாலை பொறை வாய்க்காலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் அலகு காவடிகள் மேள, தாளங்கள் முழங்க வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இரவு மாரியம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
Next Story






